சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து.. மன்சூர் அலிகான் அதிகாலையில் கைது
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார்.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் சென்ற வாரம் அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக தமிழ் நடிகர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதனால் பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுகிறது. அரசு யாருக்கோ உதவி செய்ய இப்படி திட்டமிடுகிறது என்றார்.
இந்த நிலையில் சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார். சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்டார். சென்னை வந்த சேலம் போலீஸ் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது.












Click it and Unblock the Notifications