செங்கம் அருகே மனுநீதி நாள் முகாம்: ஆதிதிராவிட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
திருவண்ணாமலை: செங்கம் அருகே மூன்று கிராம மக்களுக்கு மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை செ.நாச்சிப்பட்டு, துக்காப்பேட்ட உள்பட மூன்று கிராம மக்களுக்கு மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அலுவலர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் மண்மலை கிராம நிர்வாக அலுவலகம் அருகில் நடைபெற்றது
மேலும் இந்த மனுநீதி நாள் முகாமில் செங்கம் வட்டாட்சியர் உதயகுமார், சமூகநல பாதுகாப்பு தனி வட்டாசியர் ரேணுகா, செங்கம் வட்ட துணை நில ஆய்வாளர் மோகன்ராஜ், செங்கம், உள்வட்டம் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் பத்மா சங்கமித்தரா, சத்யா, கிருஷ்ணமூர்த்தி, தண்டபானி, அன்புமணி இவர்களுடன் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஹரிகிருஷ்ணன், சென்னம்மாள், பானுவேல், ரவி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முகாமில் கலந்துக்கொண்டர்
இதனை தொடர்ந்து இவர்களுடன் வேளாண்மை அலுவலர் கஞ்சனா பிஞ்சூர் பீட் வனக்காப்பாளர் தாண்டவராயன் முகாமில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். இம்முகாமில் 162 மனுக்கள் பெறப்பட்டு பரிசிலனை செய்து 114 ஏற்கப்பட்டு 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது
இதனையடுத்து கடந்த மாதத்தில் இப்பகுதியில் உள்ள மண்மலை செ.நாச்சிப்பட்டு, துக்காப்பேட்ட ஆகிய மூன்று கிராம மக்களிடம் பெறப்பட்ட புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்ந்தல், முதியோர் மற்றும் விதவைகள் ஓய்தியூம், புதிய பட்டா மற்றும் பெயர் பட்டா பெயர் மாற்றம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் முகாமில் வழங்கப்பட்டன.