தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்து பணம், செல்போனையும் அந்த கும்பல் பறித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அளித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக 3 பேர் கைது.

ஒரு பெண் கடந்த 24 ஆம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது சமூகத்தைச் சேர்ந்த பரிச்சயமான நபரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை அழைத்துச் சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் இருந்த ரூ.2500 ரொக்கம், ஒரு கைப்பேசி, இரு வெள்ளி மோதிரங்கள் ஆகியவற்றை அந்த 3 பேரும் பறித்துச் சென்றதாகவும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 49/2026 என பதிவு செய்யப்பட்டு பாரதிய நியாயச் சட்டம் (பிஎன்எஸ்) பிரிவுகள் 296 (b), 126(2), 115 (2), 309 (4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு சுனில் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட அந்தோணிராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லி (21) ஆகிய 3 பேரும் சில நேரங்களிலேயே கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
தூத்துக்குடியில் ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன் விலை.. சீலா மீன் ரேட்டை பாருங்க! அம்மாடியோவ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications