மழையில் இருந்து தப்பிக்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த சென்னை ஐடி நிறுவனங்கள்
சென்னை: மழை காரணமாக சென்னையிலுள்ள பல ஐடி நிறுவனங்கள் இன்று தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அதிலும் சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் சூழ்ந்துள்ள வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுப்பு கொடுத்துள்ளன. Cognizant நிறுவனம் வழக்கமான ஷிப்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த போதிலும், 24 மணிநேர சேவையை நடத்தியதாக கூறப்படுகிறது. விப்ரோ, டெக்மகிந்திரா போன்ற பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு விடுமுறைதரப்பட்டதாக ஐடி துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே சனி, ஞாயிறு என இரு நாட்கள் வழக்கமான விடுமுறையில் இருந்த ஐடி ஊழியர்களுக்கு தொடர்ந்து 3வது நாளாக விடுப்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications