For Daily Alerts
Just In
கனமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை தொடர்கிறது. கன மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்றுவிடுமுறைவிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
அதேபோல கோவை மாவ்டடம் வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்.
பெங்களூரில் நேற்று நண்பகல் முதல் இரவுவரை அவ்வப்போது மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Many parts of the Tamilnadu receiving rain on today and schools declare holiday.
Story first published: Monday, September 18, 2017, 7:56 [IST]