ஆந்திராவையடுத்து அடுத்த டார்கெட்.. தமிழக எல்லையில் ஆயுத போராட்டம்.. மாவோயிஸ்டுகள் திகில் அறிவிப்பு
Recommended Video

சென்னை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ளனர்.
அதில், மத்திய அரசின் பாசிசப் போக்கை கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் ஒடுக்கப்படுவது ஆகியவற்றை எல்லாம் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே தமிழகம், கர்நாடகம், கேரள மாநில எல்லைப் பகுதியில் மக்களை அணிதிரட்டி கொரில்லா படை மண்டலமாக அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆயுத போராட்டம், ஐக்கிய முன்னணி என்று அழைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் வெளியான நிலையில் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications