ஆந்திராவையடுத்து அடுத்த டார்கெட்.. தமிழக எல்லையில் ஆயுத போராட்டம்.. மாவோயிஸ்டுகள் திகில் அறிவிப்பு
Recommended Video

சென்னை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ளனர்.
அதில், மத்திய அரசின் பாசிசப் போக்கை கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் ஒடுக்கப்படுவது ஆகியவற்றை எல்லாம் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே தமிழகம், கர்நாடகம், கேரள மாநில எல்லைப் பகுதியில் மக்களை அணிதிரட்டி கொரில்லா படை மண்டலமாக அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆயுத போராட்டம், ஐக்கிய முன்னணி என்று அழைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் வெளியான நிலையில் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications