பிறந்தது மார்கழி - களை கட்டிய கோவில்கள்... திண்டுக்கல் கோட்டைமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை
திண்டுக்கல்: மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு அபிராமி அம்மன் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் தாடிக்கொம்பு அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் இன்று தொடங்கின.

மார்கழிப் பெருவிழா கொண்டாடப்படுவதை அடுத்து, கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
மாதத்தின் 30 நாள்களிலும் இந்த விளக்கு பூஜை நடைபெறுகிறது.
மார்கழி பூஜைக்காக அதிகாலை 3 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்படும். பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோயில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications