ஆரியர்கள் மட்டுமல்ல, திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்: கட்ஜு சர்ச்சை பேச்சு
சென்னை: ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான். இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் என்பவர்கள் பழங்குடியினர் மட்டுமே என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அசோக்குமாரை, நிரந்தர நீதிபதியாக நியமிப்பதில் அரசியல் தலையீடு இருந்தது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ.

இந்நிலையில் சென்னையிலுள்ள வர்த்தக மையத்தில், தனியார் அமைப்பு சார்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பேசியதாவது:
சமஸ்கிருதம் மொழி, பிற மொழிகளை எல்லாம் அழிக்கும் மொழி என்று கூறுவதை ஏற்க முடியாது. சமஸ்கிருதம் மொழி, அறிவியல் ரீதியான கட்டமைப்புகளை கொண்ட மொழியாகும்.
இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஆரியர் வருவதற்கு முன்பு திராவிடர்கள் இங்கு குடியேறினார்கள். இதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது. எனவே, ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்.
இவர்கள் குடியேறுவதற்கு முன்பு, வனப்பகுதியில் பூர்வீக குடிமக்களான பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். இந்த பழங்குடியினர்தான், இந்தியாவின் பூர்வீக குடிமக்களாவார்கள்.
தற்போது இந்து-முஸ்லிம் பிரச்சினை என்பது நம் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் இந்த பிரச்சினை இருந்தது வருகிறது. இந்த பிரச்சினையால்தான், நாடு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
120 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முடியவில்லை. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஏழ்மை நாடு என்று பிறநாட்டினர் கருதுவதால், இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications