சென்னையில் வங்கி கேஷியரிடம் ரூ25 லட்சம் கொள்ளை... அத்தனையும் செல்லாத ரூ1,000 நோட்டுகள்!
சென்னை வங்கி கேஷியரிடம் ரூ25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்டெட் வங்கி கேஷியரிடம் இருந்து ரூ25 லட்சம் பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன பணம் அத்தனையும் செல்லாத ரூ1,000 நோட்டுகள்.
சென்னை சாஸ்திரி நகர் ஸ்டேட் வங்கியில் இருந்து விமானம் மூலம் மைசூருக்கு ரூ25 லட்சம் பணம் காரில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மீனம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இருவர் காரை வழிமறித்து ரூ25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை போன ரூ25 லட்சமும் செல்லாத ரூ1,000நோட்டுகளாகும். இது தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்கள் எவருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications