Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் மதன் ஆஜர்... தாயார், இரு மனைவிகள் சந்திப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வேந்தர் மூவிஸ் மதன் ஆஜர்படுத்தினர். மதனின் தாயார் தங்கம், இரு மனைவிகளும் வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்து பேசினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மதனை திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை அழைத்து வரப்பட்ட மதனை அவரது வழக்கறிஞர் தினேஷ் சந்தித்து பேசினார்.

வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன். இவர், ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து நடத்தும் கட்சியில் மாநில நிர்வாகியாகவும் இருந்தார். கடந்த மே 28ம் தேதி ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மதன் மாயமானார்.

அந்த கடிதத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க பணம் வாங்கினேன். அந்தப் பணத்தை நிறுவனர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன். இப்போது அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்கள் பணம் கேட்டு நெருக்குகிறார்கள். மேலும் நான் எடுத்த படத்தை எந்த பணமும் வாங்காமல்தான் வேந்தர் டிவிக்கு வழங்கினேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான் வசூலித்த பணத்தை கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்காக செலவு செய்தேன். இப்போது நான் கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

தேடிய போலீஸ்

தேடிய போலீஸ்

இது குறித்து சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மதன் மாயமானவதற்கு பச்சமுத்துதான் காரணம். இதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் மதனை கண்டுபிடிக்கலாம் என்று மதனின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கூட்டாளிகள் கைது

கூட்டாளிகள் கைது

இந்த வழக்கில் மதனை கண்டுபிடிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. மதனை கண்டுபிடிக்காவிட்டால் சிபிஐக்கு வழக்கை மாற்றுவோம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. இந்தநிலையில் எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்து, மதனின் கூட்டாளிகள் சுதீர், குணா உட்பட பலரை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதன் மட்டும் சிக்காமல் இருந்தார். அவரைப் பிடிக்க கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

மதன் கைது

மதன் கைது

மதனின் காதலி காயத்திரியிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி மதனை திருப்பூரில் தனிப்படை போலீசார் இன்று சுற்றிவளைத்து கைது செய்தனர். தற்போது அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

தாடியுடன் வந்த மதன்

தாடியுடன் வந்த மதன்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வேந்தர் மூவிஸ் மதன் ஆஜர்படுத்தினர். சென்னை வந்த மதன் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவிற்கு காணப்பட்டார். மதனை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசினார். மதனின் தாயார் தங்கம், இரு மனைவிகளும் வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்து பேசினர்.

உயர்நீதிமன்றத்தில் தகவல்

உயர்நீதிமன்றத்தில் தகவல்

இதனிடையே மதன் கைது செய்யப்பட்டு உள்ளதாக உயர்நீதிமன்றம் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மதனை ஆஜர்படுத்த தயார் என நீதிபதிகளிடம் அரசு வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+