சரியான வேலை இல்லை, பெண்ணும் கிடைக்கவில்லை.. தண்டவாளத்தில் தலையைக் கொடுத்த எம்.பி.ஏ பட்டதாரி!
கோவை: கோவை அருகே சரியான வேலை கிடைக்காமலும், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்த எம்.பி.ஏ பட்டதாரி தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரவீன்குமார் (30). எம்.பி.ஏ. முடித்துள்ளார்.இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். போதிய சம்பளம் இல்லாமல் வருத்தத்தில் இருந்து வந்தார் பிரவீன் குமார். இந்த நிலையில் அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அதுவும் சரிவரவில்லை. எந்தப் பெண்ணும் கிடைக்கவில்லை.சரியான சம்பளம் இல்லாததைக் காரணம் காட்டி பெண் வீட்டார் மறுத்து வந்தனர்.

இதனால் வேதனை அடைந்தார் பிரவீன் குமார். எப்போதும் சோகமாக காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்குப் போவதாக கூறி விட்டு பைக்கில் கோவைக்கு வந்தார். பகல் முழுவதும் கோவையில் சுற்றி அலைந்த அவர் இரவு கோவை ரயில் நிலையம் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு ரயில்நிலைய யார்டு பகுதிக்குள் நுழைந்து அங்கு தண்டவாளத்தில் போய் படுத்து விட்டார்.
யார்டுக்கு வந்த ஒரு ரயில் பிரவீன் குமார் மீது ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்து போனார். அவரது தலை தனியாக துண்டிக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications