எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் - போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு!

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவைக் கண்டித்து மதிமுகவினர் இன்று காரைக்குடியில் உள்ள ராஜா வீட்டை முற்றுகையிடத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை ஏராளமான ம.தி.மு.க,. தொண்டர்கள், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இருந்து பேரணியாக, சுப்ரமணியபுரத்தில் உள்ள ராஜாவின் வீட்டை நோக்கி சென்றனர். அவர்களை பெரியார் சிலை அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

MDMK cadres attempt to siege H Raja's house in Karaikudi

பிரதமர் மோடியை விமர்சித்து வைகோ தொடர்ந்து பேசினால் அவர் பேசி விட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று எச். ராஜா எச்சரித்துப் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜாவின் இந்த எச்சரிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேசமயம், ராஜாவுக்கு எதிராக மதிமுகவினர் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் மதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+