தேவநற்செய்தியாளரிடம் வாழ்த்து பெற்ற மதிமுக வேட்பாளர்.. சிறப்பு ஜெபம்
சென்னை: தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஜோயல், பிரபல தேவநற்செய்தியாளர் மோகன் சி லாசரஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்காக மோகன் சி லாசரஸ் சிறப்புப் பிரார்த்தனை ஜெபத்தை மேற்கொண்டார்.
இயேசு விடுவிக்கிறார் நிறுவனரான தேவநற்செய்தியாளர் சகோதரர் மோகன் சி.லாசரஸ் அவர்களை நேற்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் தேவநற்செய்தி கூட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், மதிமுக மாவட்ட செயலாளரான ஜோயல் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார் என்றும் அவர்தான் தூத்துக்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், அவர் வெற்றி பெற நாம் எல்லோரும் இயேசுவிடம் பிரார்த்திப்போம் என்று சிறப்பு பிரார்த்தனை ஜெபம் செய்து ஆசீர்வதித்தார்.












Click it and Unblock the Notifications