மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோவிற்கு என்ன நடந்தது...பரபர தகவல்கள்!
மலேசியாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாட்டிற்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரா என்பன உள்பட பல கேற்விகளை மலேசிய குடிவரவு அதிகாரிகள் கேட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் இராமசாமி மகளின் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதி பினாங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு 11.55 மணிக்கு வைகோ சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்றுள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் விமான நிலையம் சென்ற அவரிடம் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் நீங்கள் மலேசிய நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிகாரிகள் சிலர் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று வைகோவிடம் கேட்டுள்ளனர்.
இலங்கை குடிமகனா?
மேலும் இலங்கையில் வைகோ மீது பல வழக்குகள் உள்ளதாகவும் பலர் இதே கருத்தைத் தான் வைகோ பற்றி கூறுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு தான் இந்திய குடிமகன் என்று வைகோ பதில் அளித்துள்ளார்.
பாஸ்போர்ட் பறிமுதல்
எனினும் ஆபத்தானவர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி வைகோவின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பினாங்கு மாநில துணை முதல்வர் தலையிட்டு வைகோவை அனுமதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே உத்தரவு வந்துள்ளதால் அனுமதிக்க முடியாது என்று குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தனி அறையில் சிறைவைப்பு
இதனையடுத்து வைகோவை அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள உணவகத்திற்கு கூட அனுமதிக்கவில்லையாம். அவருடன் சென்ற உதவியாளர் அருணகிரிக்கு மட்டும் மலேசிய விசா உள்ளதால் அவர் சென்று சாப்பிட்டு விட்டு வைகோவிற்கும் வாங்கி வரலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் தான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை என்று வைகோ மறுத்துவிட்டாராம்.
கெடுபிடி
வைகோவை யாரையும் சந்திக்கக் கூட அனுமதிக்காமல் கடும் கெடுபிடி காட்டியுள்ளனர் மலேசிய குடியுரிமை அதிகாரிகள். இதனையடுத்து இன்று மறு விமானத்தில் இன்று இரவு பத்தரை மணிக்கு வைகோ சென்னை வர உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications