தேர்தல் தோல்வி...ஜூன் 1-ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்பட்டார். தேமுதிக, தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மதிமுக போட்டியிட்டது.

மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 தொகுதிகளை கூட்டணிக் கட்சியினருக்கு வைகோ ஒதுக்கினார். இந்தக் கூட்டணி தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, அவர் போட்டியிட்ட உளூந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடமே கிடைத்தது.
இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதையடுத்து, அன்று காலை 11 மணிக்கு மாவட்டச் செயலர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும்.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமை வகிக்கிறார். தேர்தலில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் பங்கேற்பர் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications