மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு: தலைமைக் கழகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடைபெற இருந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் மே 18ம் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்பு முறைப்படி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications