For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை: மதிமுக ஐவர் குழு அமைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2014-இல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் 'பிற கட்சியினருடன்' கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐவர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள்,உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

vaiko

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக,

1. டாக்டர் இரா.மாசிலாமணி, கழகப் பொருளாளர்
2. அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆட்சிமன்றக் குழுச் செயலாளர்
3. இமயம் ஜெபராஜ், உயர்நிலைக்குழு உறுப்பினர்
4. புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்
5. டாக்டர் சதன் திருமலைக்குமார், உயர்நிலைக்குழு உறுப்பினர்

ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிற கட்சி'யினருடன் பேச்சுவார்த்தைன்னா... அப்ப பாஜகவுடனான கூட்டணி?

English summary
MDMK high level meet held in Chennai on January11. Lok Sabha alliance issue discussed in that meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X