தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக உள்ளது.. இதுபோன்றவற்றை விவாதிக்க வேண்டியதுதானே? எச் ராஜா கோபம்
தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். முதியவர்களை கடத்தும் கிறிஸ்த்தவ கருணை இல்லம் குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த கருணை இல்லத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
|
போலி ஆம்புலன்ஸ்
இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் மூதாட்டி ஒருவர் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டார்.

பெண் சடலம்
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த போலி ஆம்புலன்சில் பெண் சடலத்துக்கு அருகே முதியவர் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். மேலும் ஒரு முதியவர் அந்த வாகனத்தில் கடத்தப்பட்டார்.

அடக்கம் செய்யப்படுவதில்லை
செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் சமையலுக்கான காய்கறி மூட்டைகளுடன் சடலம் கொண்டு செல்லப்பட்டதோடு முதியவர்களும் அழைத்து செல்லப்பட்டனர். வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு நடத்தப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் மரணம் அடையும் முதியவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு கடத்தல்
மாறாக ஒரு தொட்டிக்குள் புதைத்து , சில நாட்கள் கழித்து அவர்களது எலும்புகளை எடுத்து பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கூறப்படுகிறது. சட்டரோதமாக நடைபெறும் இந்த வேலை குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
விவாதிக்க வேண்டியதுதானே?
இந்நிலையில் இந்த விவகாரத்தை தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என எச் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள எச் ராஜா தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராகதான் செயல்படுகின்றன என்றும், இந்த கிறித்தவ அமைப்பு மேற்கொள்ளும் சட்டவிரோத சம்பவம் குறித்து தமிழக ஊடகங்கள் விவாதிக்க வேண்டியது தானே என்றும் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications