களை கட்டும் கும்பகோணம் மகாமகம்- பக்தர்களுக்காக 24 மணி நேர மருத்துவ முகாம்கள்
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக திருவிழாவில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில், "கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புனித நீராட வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பன்முக சுகாதார நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை 24 மணி நேரமும் செயல்படும் 99 அடிப்படை வசதிகள் கொண்ட முகாம்கள், 5 அரசு மருத்துவமனை முகாம்கள், 34 நடமாடும் முகாம்கள் உள்பட 138 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இம்முகாம்கள் வரும் 23 ஆம் தேதி வரை 3 பணிமுறைகளில் 3 மருத்துவரின் தலைமையில் செவிலியர், மருந்தாளுநர் உள்பட குழுவாக செயல்படும்.
முகாம்களில் அனைத்து வகையான அவசர சிகிச்சைகளும் மற்றும் சாதாரண நோய்களுக்கு சிகிச்சை வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. நாளை போலியோ தினம் என்பதால் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 இணை இயக்குனர்கள் தலைமையிலான மருத்துவக்குழு தனித்தனியாக சென்று குடிநீரின் குளோரின் அளவை பரிசோதித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்து வருகிறது. மேலும், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா, மருத்துவக் கழிவுகள் உடனுக்குடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படுகிறதா, கொசுமருந்து தினசரி அடிக்கப்படுகிறதா, மருத்துவ முகாமைச் சுற்றி சுகாதாரம் முறையாக பேணப்படுகிறதா என்பதையும் தினசரி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் 6 மண்டலங்கலாக பிரிந்து பிற மாவட்டங்களிலிருந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களும், 102 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கும், உணவு விடுதிகள் போன்றவற்றில் உணவு தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மருத்துவக் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை சார்பாக மொத்தம் 2 ஆயிரத்து 472 மருத்துவ துறை சார்ந்த நபர்கள் மகாமக சிறப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications