மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை சென்னையில் நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:தமிழக மருத்துவர்களின் நலன்கருதி மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்வினை சென்னையில் நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு வருடமும் அகில இந்திய மருத்துவ மேல்படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். சென்னையில் பெய்த தொடர் மழையால் அகில இந்திய மருத்துவ மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுத உள்ளனர். ஆனால், சென்னையில் தேர்வு எழுத வேண்டிய பலருக்கு ஜம்மு காஷ்மீர், அசாம், ஒடிசா, டெல்லி போன்ற வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பண்டிகை காலமாக இருப்பதால் தேர்வு எழுதுவதற்காக அங்கு சென்று வருவதற்கு ரயில் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. மேலும் விமானப் பயணத்திற்கும் அதிகப்படியான செலவாகும். இதற்காக சென்றுவர 6 நாட்களுக்கும் மேலாகும். எனவே தேர்வு எழுத இருக்கும் தமிழக மருத்துவர்களுக்கு சென்னையிலேயே தேர்வு மையம் அமைத்து அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும்.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் இதை நடைமுறைப்படுத்தி, தமிழக மருத்துவர்கள் சென்னையிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications