வெள்ளம்...குரோம்பேட்டை மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் சேதம்
சென்னை: தொடர்ந்து பெய்த கனமழைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த மருந்து, மாத்திரைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. மழைநீர் உள்ளே புகுந்து விடாமல் இருக்க மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் மண்மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் அதையும் மீறி மருத்துவமனையின் கீழ் பகுதி முழுவதும் மழைநீர் புகுந்தது. பிரசவ வார்டு, பொது மருத்துவ பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த புற நோயாளிகளும் கடும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் கட்டிலுக்கு கீழ் பகுதி முழுவதும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி இருந்தது. இதையடுத்து நோயாளிகள் அவசர அவசரமாக மாடி தளங்களுக்கும், மற்ற மருத்துவமனைகளும் மாற்றப்பட்டனர்.
தரைத்தளத்தில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால், அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் பெரிதும் சேதமடைந்தன. மேலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளும் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கி சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications