நான் என்ன பேசினாலும் மீம்ஸ் போடுறாங்கப்பா... ஃபீல் பண்ணும் அமைச்சர் ஜெயக்குமார்

ன்னைப் பற்றி மீம்ஸ் போடுவதற்காகவே சம்பளத்திற்கு ஆட்கள் வைத்துள்ளார் தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் என்ன பேசினாலும் அதை வைத்து மீம் போட்டு கிண்டலடிக்க சிலரை ஸ்டாலின், தினகரன் ஆகியோர் சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் வைத்துள்ளார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மழை குறித்த நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Meme Creators are paid by Stalin and TTV Dinakaran Says Minister Jayakumar

வெள்ள மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இப்போது வரை சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தான் என்ன சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ் போடப்படுகிறது. திட்டமிட்டு மக்களை இதில் திசை திருப்புகிறார்கள். என்னை வைத்து மீம்ஸ் போடவே ஸ்டாலின், தினகரன் தலைமையில் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

நான் பத்திரிகையாளர்களிடம் பேசிய செய்தி வந்தவுடன் அதை வைத்து எப்படி கிண்டல் அடிக்கலாம், மீம்ஸ் போடலாம் என இதற்காகவே தனியாகவே சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து இருக்கிறார்கள். ஸ்டாலின், தினகரன் மற்றும் இன்னொரு தரப்பு என மொத்தம் மூன்று கும்பல்கள் இதைச் செய்து வருகின்றனர்.

என்ன பேசினாலும் அதை வைத்து தவறாக மீம்ஸ் போடுவது, கிண்டல் அடிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+