நல்லவேளை இப்படி நடக்காம நாமெல்லாம் தப்பிச்சுட்டோம்!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் மத்திய அரசு திட்டமிட்டிருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பது குறித்து ஒரு படம் வாட்ஸ் ஆப்பில் உலவிக் கொண்டுள்ளது.
வாட்ஸ் ஆப் புதிதாக சில சைன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் என்று கூறி அதில் கலலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்தப் படத்தில் என்ன உள்ளது என்றால்...
ஒரு ஷேட் சைன் என்றால் நாம் அனுப்பிய மெசேஜ் அனுப்பப்பட்டு விட்டது
இரண்டு ஷேட் சைன் - மெசேஜ் உரியவரிடம் போய் விட்டது
இரண்டு நீலம் மற்றும் ஒரு ஷேட் சைன் - மெசேஜை பெற்றவர் படித்து விட்டார். ஆனால் அரசு படிக்கவில்லை.
மூன்று நீல நிற சைன் - அரசு படித்து விட்டது. மெசேஜில் பிரச்சினை இல்லை ஓகே.
இரண்டு நீலம் மற்றும் ஒரு சிவப்பு நிற சைன் - மெசேஜை அரசு படித்து விட்டது. ஆனால் அதில் சிக்கல் உள்ளது. அரசுக்கு ஒப்புதல் இல்லை.. (சீக்கிரமே உங்களை வந்து போலீஸ் பிடித்துச் செல்லும்).
இதெப்படி இருக்கு?
நல்லவேளை மத்திய அரசு தனது திட்டத்தை வாபஸ் பெற்று விட்டதால் நாமளும் தப்பித்தோம், வாட்ஸ் ஆப்காரர்களும் புதிய சைன் உருவாக்கும் வேலையிலிருந்து அவர்களும் தப்பித்தார்கள்.












Click it and Unblock the Notifications