"ஆய்" போறதுக்கும் ஆதார் கார்டு காட்டணுமோ.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!
பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார்கார்டு தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளைப் பெற ஆதார்கார்டு அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், மதிய உணவு பெறவும் ஆதார்கார்டு தேவை என்று கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் மத்திய அரசை வறுத்து எடுத்து வருகின்றனர்.
ஏழ்மை காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக மதிய உணவு திட்டத்தை தொடங்கினார் அப்போதய முதல்வர் காமராஜர். அதை சத்துணவு திட்டமாக மாற்றினார் எம்ஜிஆர். 1989ல் கருணாநிதி ஆட்சியில் சத்துணவுடன் முட்டை போடப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் கலவை சாதங்கள், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தினசரி முட்டை அளிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஊழல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. சத்துணவு சாப்பிடாத மாணவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அதற்கான பொருட்களை சத்துணவில் பணியாற்றும் ஊழியர்களே எடுத்துச்செல்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.
இதனிடையே பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலவித கருத்துக்களை மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
|
காமராஜரும் மோடியும்
மதிய உணவு போட்டு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தார் காமராஜர். அதே நேரத்தில் மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களிடம் ஆதார் கேட்டு இம்சிக்கிறார் மோடி என்று வலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
|
அதுக்கும் ஆதார் கார்டு காட்டணுமோ?
மதிய உணவு சாப்பிட மட்டும்தானா? பாத்ரூம் போவதற்கும் ஆதார் காட்ட வேண்டுமா? என்றும் கேட்கிறார் ஒரு வலைஞர்.
|
கோவிலுக்குள் நுழையக்கூடாது
ஆதார் கார்டு இல்லாதவர்கள் கோயிலுக்கு வரக்கூடாதுனு சொல்லுங்கடா என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆன்லைனின் பதிவு செய்ய ஆதார் கார்டு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
|
கக்கூஸ் போறதுக்கு கூட
இனி மக்கள் கழிவறை செய்வதற்கு கூட ஆதார் கார்டு அவசியம் என்று கேட்பாளர்கள் என்று வேதனையுடன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
டிஜிட்டல் இந்தியா
பெட்ரோல் விலை உயர்வு ஒரு பக்கம் வாட்டி எடுக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மக்களை தவிக்க விடும் மத்திய அரசு மதிய உணவுக்கும் ஆதார் கார்டு கேட்பது அநியாயம் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
|
அடையாளமற்றவர்கள்
நம்முடைய அடையாளத்தை கூட ஆதார் கார்டு மூலம் நாமே அடிக்க நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications