மோடியின் அறிவிப்பால் செல்லாக்காசாகிப் போன 1000,500 ரூபாய்
500ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பால் அந்த பணம் எல்லாம் செல்லாக்காசாகியுள்ளது. அவை பொட்டலம் மடிக்கத்தான் லாயக்கு என்பது போல ஜோக்குகள் வெளியாகி வருகின்றன.
சென்னை: இனி 500 ரூபாய், 1000 ரூபாய் எல்லாம் செல்லாது என்று மோடி அறிவித்தாலும் அறிவித்தார் எல்லாரும் ஆடிப்போய் விட்டனர். வீட்டில் வீட்டுக்காரருக்கு தெரியாமல் அஞ்சரைப் பெட்டியில் போட்டு வைத்திருந்த பணம் எல்லாம் அவ்வளவுதானா? என்கிற ரீதியில் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
500 ரூபாய் நோட்டாக காதலை சேமித்தேன்... மோடி போல் செல்லாக்காசாக்கி விட்டாய் என்று கவிதை எழுதும் அளவிற்கு போய்விட்டது மோடியின் அறிவிப்பு.
டுவிட்டரில் அமெரிக்க தேர்தலை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி அறிவிப்புதான் டிரெண்டானது.
பொட்டலம் மடிக்கத்தான் லாயக்கு
அடடே இனி 500 ரூபாய், 1000 ரூபாய் எல்லாம் பொட்டலம் மடிக்கத்தான் லாயக்கா என்று சொல்லாமல் சொல்கின்றனர். மிக்சர், கடலைப் பருப்பு வைத்து கட்டிக் கொடுக்கின்றனர்.
|
கவிதை... கவிதை
அன்பே உன் மீதா என் காதலை 500 ரூபாய் நோட்டு போல் சேமித்து வைத்தேன் ஆனால் நீ மோடி போல் அதை செல்லா காசாக்கி விட்டாய் என்று கவிதை பாடியுள்ளார் ஒரு பதிவாளர்.
|
ஒளித்து வைத்த நோட்டுக்கள்
எங்க அம்மாகிட்ட நேற்று ₹500 இருந்தா கொடு நாளைக்கு திருப்பித்தாரேனு கேட்டேன். இல்லவே இல்லனு சாதிச்சாங்க இப்ப 8 500 ரூபாய் நோட்டு இருக்காம் என்கிறார் ஒருவர்.
|
எடைக்கு வாங்கும் நோட்டுக்கள்
1000 ரூபாய் நோட்டு் 10 ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டு 5 ரூபாய்க்கு இவ்விடத்தில் வாங்கிகொள்ளபடும்.. இச்சலுகை குறுகிய காலம் மட்டுமே என்று ஒருவர் பதிவிட இன்னோருவரோ, கிலோ 12 ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுக்கள், 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என்று கூறியுள்ளார்.