கலாம் நினைவிடத்தை கட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து செங்கல், மணல் தேவை
ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சமாதி இருக்கும் இடைத்தில் நினைவிடம் அமைக்க அனைத்து மாநிலங்களில் இருந்தும் செங்கல் வரவழைக்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தார் விரும்புகிறார்கள். மேலும் கலாமின் நினைவிடத்தை வடிவமைப்பது குறித்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதி இருக்கும் இடத்தில் நாய், மாடுகள் உலாவி வந்தன. இது குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து சமாதி இருக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டது.
மாநில அரசு கலாமின் நினைவிடத்திற்கு நிலம் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் ஒன்இந்தியாவிடம் செல்போனில் கூறுகையில்,

ராமேஸ்வரம்
டிஆர்டிஓ அதிகாரிகள் எங்களை சந்தித்து பேசினார்கள். நினைவிடம் தொடர்பான பணிகளை உடனே துவங்குவதாக அவர்கள் வாக்களித்துள்ளனர். முதலில் சமாதி இருக்கும் இடத்தில் வேலி அமைக்கப்படும்.

மழை
கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் நினைவிடம் அமைக்கும் வரை தற்போதுள்ள கூடாரத்தை வலுப்படுத்த டிஆர்டிஓ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நினைவிடம்
கலாம் நினைவிட பணிகள் இன்று துவங்கும் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் நினைவிட பணிகள் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஹவுஸ் ஆப் கலாம் நினைவிட டிசைனுக்கு ஒப்புதல் அளித்த பிறகே நினைவிட பணிகள் துவங்கும்.

போட்டி
கலாம் மக்களின் குடியரசுத் தலைவர். அதனால் அவரின் நினைவிடத்தை மக்கள் வடிவமைக்க வேண்டும் என்று டிஆர்டிஓ விரும்புகிறது. சமாதியில் வேலி அமைக்கும் பணி முடிந்த பிறகு நினைவிட டிசைன் குறித்த போட்டியை டிஆர்டிஓ அறிவிக்கும். கட்டிடக் கலை நிபுணர்களின் 5 டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒன்றை ஏற்போம். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் உண்டு என்று தெரிவித்துள்ளனர்.

செங்கல்
கலாம் நினைவிடம் அமைக்க அனைத்து மாநிலங்களில் இருந்தும் செங்கல், மணலை கொண்டு வருமாறு கலாம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளோம். நினைவிட குழுவில் எங்கள் ஹவுஸ் ஆப் கலாம் உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications