ரூ.2000 நோட்டுக்கு பதில் ரூ.20 நோட்டு... கோவை ஆக்ஸிஸ் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் அதிர்ச்சி!
கோவை ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டுக்கு பதில் ரூ.20 நோட்டு வந்ததால் வியாபாரி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
கோவை: கோவை பீளமேடு ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் ஒன்றில் ரூ.2000 நோட்டுக்கு பதில், ரூ.20 நோட்டு வந்ததால் வியாபாரி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
கோவை பீளமேடு சவுரி பாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ். வியாபாரியான இவர் நேற்று மாலை தன்னிடமிருந்த 2 ஏ.டி.எம்.கார்டை கொண்டு சவுரிபாளையத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். 2 கார்டையும் பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 6 முறை ரூ.60 ஆயிரம் எடுத்துள்ளார்.

அப்போது முதல் 5 முறை தலா ரூ.10 ஆயிரம் எடுத்த போது ஒவ்வொரு முறையும் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ஒரு 20 ரூபாய் நோட்டுமாக மொத்தம் ரூ.40 ஆயிரத்து 100 வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த காளிதாஸ் பின்னால் நின்றவரிடம் பணம் எடுக்குமாறு வழிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து 6-வது முறையாக ரூ.10 ஆயிரம் எடுத்த போது சரியாக ஐந்து 2 ஆயிரம் நோட்டுகள் வந்தன.
2 கணக்குகளில் இருந்தும் மொத்தம் ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. ஆனால் அவருக்கு மொத்தம் ரூ.50 ஆயிரத்து 100 மட்டும் ஏ.டி.எம். மூலம் கிடைத்துள்ளது.
இது குறித்து கூறிய காளிதாஸ், "நான் அவசர மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க வந்தேன். முதல் 3 முறை பணம் எடுத்த போது ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் ரூ.20 கலந்து வந்ததை பார்க்கவில்லை.
4-வது முறை பணம் எடுத்த போது தான் கவனித்தேன். உடனே நான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது ஒவ்வொரு முறை ரூ.10 ஆயிரம் எடுத்த போதும் நான்கு 2 ஆயிரம் ரூபாயுடன் ஒரு 20 ரூபாயும் சேர்ந்து வந்திருந்ததை கண்டு பிடித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.
ஏ.டி.எம்.மில் 20 ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வந்தது? என்பது புதிராக உள்ளது. வங்கி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் யாரும் வரவில்லை. எனவே வங்கி கிளைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளேன்." என்று தெரிவித்தார்.
ரூ.2000 நோட்டுக்குப்பதில், ரூ.20 நோட்டு ஏடிஎம்மில் வந்ததால் வாடிக்கைகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications