ஆந்திரா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- கடலோர மாவட்ட மக்களே குடையை கையில் எடுங்க!
சென்னை: ஆந்திரா அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் ஏற்படுவதால் ஒரு சில பகுதிகளில் மழை பெய்கிறது.

நேற்றும், இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் காற்றும் இதமாக வீசுகிறது.இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதுபற்றி வானிலை மைய அதிகாரி ஒருவர், "ஆந்திராவின் வடக்கு எல்லைக்கும், ஒடிசாவின் தெற்கு எல்லைக்கும் இடையே மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம். காற்றழுத்த தாழ்வு நகர்வதை பொருத்து மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications