ஆலந்தூர்- ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
சென்னை: சென்னையில் ஆலந்தூர்- விமான நிலையம் இடையே உயர்நிலைப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதில் தற்போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலந்தூர் - விமான நிலையம் இடையேயான உயர்நிலைப் பாதை பணி முடிவடைந்துள்ளது.

இந்த வழித் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஜூலை 28, 29-ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வில் முழு திருப்தி இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மார்க்கத்தில் சோதனை ஓட்டம் இந்த ஆகஸ்ட் முழுவதும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் பின்னர் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதும், கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதன் மூலம் விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பயணிகள் விரைவில் வந்து செல்ல முடியும்.

அடுத்ததாக, சின்னமலை - ஆலந்தூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தட பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும் சோதனை ஓட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications