திமுக ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் - மு.க. ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை மெட்ரோ ரயில் விஸ்தரிக்கப்பட்டு அதன் கட்டணம் குறைக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை புறநகர் பகுதி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூவிருந்தவல்லி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, சென்னை வளர்ச்சிக்காக புது வாக்குறுதிகளை அவர் அறிவித்தார், அதில், குடிசை இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும். லண்டனில் இருப்பது போல் "ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம்" கொண்டு வந்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும்.
சென்னை மெட்ரோ விஸ்தரிக்கப்பட்டு அதன் கட்டணம் குறைக்கப்படும். 20 வருடத்திற்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, இருக்கின்ற பேருந்துகளின் எண்ணிக்கையும், ஏ.சி. பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
போலீஸ் பூத்துகள் நிறுவப்பட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய "மொபைல் ஆப்" வழங்கப்படும்.
மக்கள் நடமாடும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் உருவாக்கப்படும்.குடிநீரில் கழிவு நீர் கலப்பது அறவே தடுக்கப்படும்.
வில்லங்க சான்றில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் ஒற்றை சாளர முறையில் கட்டிடங்கள் கட்ட 60 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். வில்லங்கச் சான்றிதழ் கட்டண உயர்வு குறைக்கப்பட்டு.
அதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பீடு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக ஆட்சியில் நசுங்கி விட்ட கட்டுமானத் தொழிலை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications