பஸ் நம்பருக்குப் பதில் கலரடிச்சு கலக்க சென்னை போக்குவரத்துக் கழகம் ரோசனை!
சென்னை: ஒவ்வொரு வழியில் செல்லும் பேருந்துகளுக்கு ஒவ்வொரு நிற பெயிண்ட் அடித்தால் என்ன என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது.
சென்னையில் பல்வேறு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்கு வழிகளைப் பொறுத்து ஒவ்வொரு நிறம் அளிப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் இந்த எண் கொண்ட பேருந்து இந்த வழித்தடத்தில் போகும் என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை. மாறாக இந்த நிற பேருந்து இந்த வழியில் செல்லும் என்று நிறங்களை நினைவில் வைத்தாலே போதுமானது.

இந்த திட்டம் முதல்கட்டமாக ஓஎம்ஆர் ரோட்டில் செயல்படுத்தப்படுகிறதாம். பின்னர் படிப்படியாக இந்த திட்டம் பிற வழித்தடங்கலிலும் அமல்படுத்தப்படுமாம்.
இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த 60 பேரை ஓஎம்ஆர் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது மாநகர போக்குவரத்து கழகம். இந்த திட்டம் குறித்து எம்பார்க் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் ஆய்வு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications