மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63வது முறையாக 100 அடியை எட்டியது!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து பெய்து வந்தது. மழை தீவிரம் அடைந்ததால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
குடிநீருக்காக 800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த 22 நாளில் மட்டும் 53 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 63வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. 100 அடியை மேட்டூர் அணை எட்டியதால் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமையில் அரசு அதிகாரிகள் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.












Click it and Unblock the Notifications