For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டியது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணை நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.

    சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கனஅடி

    ஒரு லட்சம் கனஅடி

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று வரை 90000 கனஅடியாக இருந்த அணைக்கான நீர் வரத்து இன்று ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது

    நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90000 கனஅடியில் இருந்து 100764 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது.

    நீர் இருப்பு 59.44 டிஎம்சி

    நீர் இருப்பு 59.44 டிஎம்சி

    அணையில் நீர் இருப்பு 59.44 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

    அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

    இதனிடையை கர்நாடகாவில் பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒரு வேளை மழை மேலும் தீவிரமடைந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Mettur dam water level has crossed 95 ft. water inflow of the dam is over one lakh Cubic feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X