எம்ஜிஆர் பிறந்த கண்டியில் பிரமாண்டமாக நடக்கிறது நூற்றாண்டு விழா.. இலங்கை அமைச்சர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த ஊரான கண்டியில், அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. வரும் 16ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

MGR centenary will be held in Kandy

ஆசியாவின் 2வது மிகப்பெரிய நூலகமான புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, அவர்கள் தமிழக அரசு சார்பில், சுமார் 1 லட்சம் புத்தகத்தை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் விழா குறித்து சென்னையில் இன்று இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

MGR centenary will be held in Kandy

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான சூழல் உருவாகிவருகிறது. இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழர்களின் நிலங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

MGR centenary will be held in Kandy

தமிழகத்தில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கையில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இலங்கை மற்றும் தமிழகம் நடுவே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்தது.

இலங்கை-தமிழகம் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக, எம்ஜிஆர் விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு இலங்கை அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+