எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேரவை தொடக்க விழா
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் சார்பாக தமிழ்ப் பேரவை தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் துவக்கமாக டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகம் துணைப் பதிவாளர் முனைவர் பி.காளிதாஸ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்ப் பேரவையின் நோக்கத்தை குறித்து பேராசிரியர் முனைவர். ந.வேலுசாமி விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் தலைவர், மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் புரவலர், பொறியாளர். ஏ.சி.எஸ்.அருண்குமார் பேரவை பதாகையை திறந்து வைத்து தமிழ்ப் பேரவை உறுப்பினர் அட்டையை ஒவ்வொரு துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசன் தலைமையில் சுகி சிவம் சிறப்புரையாற்றினார்.
இந்த தமிழ்ப் பேரவை தொடக்க விழாவில் டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் செயலாளர் ரவிக்குமார், பதிவாளர் முனைவர் சி.பா.பழனிவேலு, பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் தலைவர் முனைவர் உமா ராஜாராம், தமிழ்ப் பேரவை செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.வேலுசாமி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.