'நடிகை' ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். எப்படி அழைத்தார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா படங்களில் நடித்து வந்த காலத்தில் எம்.ஜி.ஆர். அவரை வாயாடி என்றே அழைத்து வந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அதன் பிறகு அந்த சூப்பர் ஜோடி மீண்டும் மீண்டும் சேர்ந்து நடித்தது.

அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 28. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்து வளர்த்துவிட்டவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்ததே.
படங்களில் நடிக்கும் காலத்தில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். வாயாடி என்றே அழைத்தார். இது குறித்து செய்தியாளர்கள் ஒரு முறை ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
அவர் கலகல நான் லொட லொட என்றார். ஒரு காலத்தில் ஜெயலலிதா படப்பிடிப்பு தளத்தில் கலகலவென ஜாலியாக பேசுவார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறியதுண்டு.












Click it and Unblock the Notifications