பாலில் கலப்படம்... அமைச்சரிடம் ஆதாரங்கள் உள்ளதா? - ஜி.கே வாசன் கேள்வி - வீடியோ
தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் உள்ளது என்பதற்கு ஏதேனும் ஆதரங்கள் அமைச்சரிடம் உள்ளதா? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேள்வி கேட்டுள்ளார்.
திருச்சி: பாலில் கலப்பட்டம் உள்ளது என்பதற்கு அமைச்சரிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா? என திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேள்வி கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு ஆவின் பால் நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் முகவர்கள் மூலம் பால் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் உள்ளது. அது நிரூபிக்கப்பட்டால், அந்த நிறுவனங்கள் மூடப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்துக் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சரே பாலில் கலப்படம் உள்ளது என கூறியுள்ளார். இது மக்களை அச்சமடைய செய்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளது என்பதற்கு ஏதாவது ஆதாரம் அமைச்சரிடம் உள்ளதா? சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை எந்த நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வேண்டும் என ஜி.கே வாசன் வலியுறுத்தினார்.