புதுச்சேரியிலும் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை புதுச்சேரியில் பால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனமான "பாண்லே" நேற்று அறிவித்தது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பால் விலை உயர்வால், அது சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆகவே, பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications