பொது மக்கள் முற்றுகை.. அரசு விழாவில் பாதியில் வெளியேறிய அமைச்சர்
தூத்துக்குடி: தங்கள் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஓன்றியம் ஆழ்வார்தோப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்புத்தூர், ஈரோடு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆழ்வார்தோப்பில் பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. அதுகுறித்து அமைச்சர் சண்முகநாதன் மற்றும் கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா ஆழ்வார்தோப்பில் நடந்தது. இதில் அமைச்சர் சண்முகநாதன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அடிப்படை வசதி, சுகாதாரம் கேட்டு அமைச்சரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறிய அவர் விழாவில் பேசாமல் அங்கிருந்து நழுவினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆழ்வார்தோப்பு பகுதியில் பல மாதங்களாக பஸ் வசதி இல்லை. அமைச்சர், கலெக்டரிடம் மனு கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் சுமார் 3 கிமீ நடந்து சென்று தான் பஸ் பிடிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் டாக்டர்கள் வருவதில்லை. இதனால் பேறுகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பஸ் வசதி இல்லாததால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications