கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்பியும் செய்தி தொடர்பாளருமான கேசி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.
கேசி பழனிச்சாமியின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.

அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் அவரை நீக்கியது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். கொள்கை முடிவு குறித்து பேசியதால் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதா என்பதை கட்சிதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். கொள்கை முடிவை தனி நபர் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் மறுப்பு
கேசி பழனிச்சாமியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
பாஜக நிர்பந்தத்தால் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

முடிச்சுப்போடக்கூடாது
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் காவிரி விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முடிச்சுப்போடக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications