ஜெயலலிதா ஆன்மா எங்களுக்கே ஆதரவாக உள்ளது... ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கையை வாசித்த ஜெயக்குமார்!
ஜெயலலிதாவின் ஆன்மா தங்களுக்கே ஆதரவாக இருப்பது இரட்டை இலை சின்ன தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜெயலலிதாவின் ஆன்மா தங்களுக்கே ஆதரவாக இருப்பது இரட்டை இலை சின்ன தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்துக் காட்டினார்.
அமைச்சர் ஜெயக்குமார் வாசித்த கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது : இரட்டை இலை தீர்ப்பின் வெற்றியை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறோம். தீர்ப்பு மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்பது நிரூபனமாகிறது. ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் நாங்கள் தான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

அதிமுக இரும்புக் கோட்டையாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எஃகு கோட்டையாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார். முன்னதாக அதிமுக அலுவலகம் வந்த முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். பதிலுக்கு அந்த நிர்வாகிகள் இனிப்புகளை முதல்வர், துணை முதல்வருக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications