துப்பாக்கி சூடு.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார்
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதுரை: திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர் என்றும், ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலினின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு அனுமதி இல்லை. ஒருபோதும் அதை அனுமதிக்கவும் மாட்டோம். ஸ்டெர்லைட் நிர்வாகம், மாசு கட்டுபாடு வாரியம் நோட்டிஸ்க்கு விளக்கம் அளிக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரச்சினைக்காக இணைய சேவையை முடக்கப்பட்டது. வட மாநிலங்களில் உள்ள நடைமுறை தற்பொழுது இயல்பு நிலை திரும்புகிறது. இணைய வசதிகளும் செயல்படுகின்றன.
துப்பாக்கி சூடு நடத்தியது துரதிருஷ்டவசமானது. அது கவலையளிக்கிறது. வேதனையளிக்கிறது. ஆனால் அதனை நியாயப்படுத்தவில்லை. நாளை நானும் துணை முதலமைச்சரும் தூத்துக்குடி சென்று நேரிடையாக பார்வையிட உள்ளோம்.
திமுக ஆட்சிக் காலத்தில் 1970, 1974, 1989, 1991, 2006, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலினின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. திமுக ஆட்சியில் தான் இந்த ஆலையை மூட முழு அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆலையை மூட அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது. அதனை அரசு என்றும் அனுமதிக்காது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications