காவிரி மேலாண்மை வாரியம்.. அவசரம் ஏன்? இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே- ஜெயக்குமார் பேட்டி

தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது உண்டா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே- ஜெயக்குமார் பேட்டி-வீடியோ

    சென்னை: தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது இல்லை. நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    காவிரி நதி நீரை பங்கீடு செய்ய ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்தது. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    எனினும் இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித நடவடிக்கையையும் மத்திய அரசு செய்தது போல் தெரியவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காவிரிக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    17 ஆண்டுகள்

    17 ஆண்டுகள்

    அப்போது அவர் கூறுகையில் காவிரி நீருக்காக அதிக முறை போராடிய இயக்கம் அதிமுகதான். எங்களை காட்டிலும் 17 ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட இருந்தவர்கள் திமுகவினர். அப்படியிருந்தபோது தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது உண்டா?

    3 நாட்கள் அவகாசம்

    3 நாட்கள் அவகாசம்

    திமுகவை பொறுத்தவரை நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக்கொள்வார்கள்.

    காவிரி வாரியம் அமைக்க 3 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நாள் இரவிலும் கூட என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

    திட்டவட்டமாக

    திட்டவட்டமாக

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி அதை நீர்வளத் துறை அமைச்சகத்திடம் காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர வேற எதையும் ஏற்கமாட்டோம் என்று சொல்லவிட்டோம். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது பார்ப்போம்.

    எங்கள் குறிக்கோள்

    எங்கள் குறிக்கோள்

    அதிமுக எம்பிக்கள் கடந்த 15 நாட்களாக காவிரிக்காக நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். ஆனால் திமுக காவிரிக்காக நாடாளுமன்றத்தில் போராடியதில்லை. காவிரி உரிமையை ஜெ. வழியில் நிலைநாட்டுவதே எங்கள் குறிக்கோள் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+