ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் நிச்சயம் எச் ராஜாவும் இருப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் நிச்சயம் எச் ராஜாவும் இருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கருணாஸை மட்டும் கைது செய்த நிலையில் எச் ராஜாவை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும், மொழிபிரச்சினையை கொண்டு மக்களை பிரித்தாள வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்களுக்கு எல்லாம் மாமியார் வீடு ஜெயில்தான்.

எச் ராஜாவாக இருந்தாலும்
ஒருவர் பின் ஒருவராக போவர். நீங்கள் யாரையெல்லாம் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் இது நடக்கும். எச் ராஜாவாக இருந்தாலும் கருணாஸாக இருந்தாலும் எல்லை உள்ளது.

விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும்...
கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் ராஜாவும் இருப்பார். பிரச்சினை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.

போராட்டம்
குற்றத்துடைய ஆழம் என்ன என்பதை பார்க்க வேண்டும். பிற சமூகத்தினர் கருணாஸை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

புது விஷயம்
அடிமை அரசியலை முழுமையாக செய்ய கூடியவர் டிடிவி தினகரன்தான். எங்களுடையது சுதந்திர அரசியல். எதை சொன்னால் எடுபடும் என்று பார்க்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. தினகரன் சொல்வது எல்லாம் புளிச்சு போன ஒன்று. புது விஷயம் இருந்தால் சொல்ல சொல்லுங்கள்.

நூற்றாண்டு விழா
31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 32-ஆவது மாவட்டமாக சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரை அழைப்பது அரசு விழா, இதில் மரபை பின்பற்றியுள்ளோம். சென்னையை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதே ஸ்டாலினும், தினகரனும் வேறு மாவட்டங்களில் எம்எல்ஏவாக இருந்திருந்தால் அவர்களை அழைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications