காவிரி மேலாண்மை வாரியம்: எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்- ஜெயக்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவிரி விவகாரத்தில் அதிகளவில் அழுத்தம் கொடுத்தது அதிமுக மட்டும்தான். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.

29-ஆம் தேதிக்கு பிறகு
அவர்கள் சொன்னார்கள் , இவர்கள் சொன்னார்கள் என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. மேலாண்மை வாரிய விவகாரத்தில் 29-ஆம் தேதிக்கு பிறகுதான் கருத்து கூற முடியும்.

வைகோ புரிந்து கொள்ள
காவிரி விவகாரத்தில் விளம்பரத்துக்காக தினகரன் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆதி திராவிட மக்களுக்கு வீட்டு வசதியை உருவாக்க உள்ளதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

நான்தான் உள்ளேன்
ஆதி திராவிட மக்களுக்கு எதிரான வேலையை வைகோ ஏன் செய்கிறார் என தெரியவில்லை. வீட்டு வசதி கோரும் ஆதி திராவிட மக்களின் பின்னால் நான்தான் உள்ளேன்.

மாயதோற்றம்
மூலக்கொத்தளம் பகுதியில் ஒரு உடல் கூட அடக்கம் செய்யப்படவில்லை. மூலக்கொத்தளம் நினைவுச் சின்னங்களை அழிப்பதாக மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications