கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்கிறார் தினகரன்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

டிடிவி தினகரன் கண்கெட்டப் பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் கண்கெட்டப் பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்எக்கள் 18 பேர் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு டிடிவி தினகரன் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறுவது உரிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் எப்போதும் சூர்ய நமஸ்காரம் செய்பவர் என்றும் அவர் கூறினார்.

Minister Jayakumar slams TTV dinakaran

தற்போது கண்கெட்டப் பிறகும் அவர் சூர்ய நமஸ்காரம் செய்வதாகவும் ஜெயக்குமார் சாடியுள்ளார். தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார். 100 ஆண்டுகள் கட்சி நிலைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழுவுவை கூட்டியதை தொடர்ந்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது ஒரு தொடர் நடவடிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதனிப்படையில் டெல்லி சென்றதாகவும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+