கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனையே கொடுக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அப்படி பாதிப்பு ஏற்படும்போது கவுன்சிலுக்கு கொண்டு போகலாம்.
கலப்படத்தைப் பொறுத்தவரையில் அதை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. கலப்படத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்.
கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனையே தர வேண்டும். கலப்படம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications