பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 மாதங்களாக மயக்க ஊசி போட்டும் போதை ஊசி போட்டும் சிறுமிக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அரசு நடவடிக்கை
அப்போது பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துணிச்சலுடன் புகார்
குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் குற்றங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் கூறினார். பாலியல் கொடுமைகள் நடந்தால் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாற்றி மாற்றி பேசுகிறார்
மேலம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குகுமார் முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றார். முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற அவர் பின்னர் நான் அப்படி கூறவே இல்லை என்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்
ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு முட்டை கொள்முதல் செய்தால் ரூ. 5000 கோடிக்கு எப்படி முறைகேடு நடக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொன் ராதாகிருஷ்ணன் முன்வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications