ராகுல் காந்தி கூறியதை ஏற்று, 7 தமிழர்களை விடுதலை செய்யலாம்.. கடம்பூர் ராஜூ சொல்கிறார்
ராஜிவ் கொலை வழக்கில் ராகுல் காந்தி கூறியதை ஏற்று 7 பேரை விடுவிக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதை ஏற்று, மத்திய அரசு அவரை விடுவிக்கலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உதவ வேண்டும் எனக் கேட்டதாகக் தெரிவித்திருந்தார்.

மேலும், ராகுல் காந்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்ததாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர். திரைப்படத்தில் தலித் அரசியலை பேசிவரும் பா.ரஞ்சித் பேரறிவாளன் விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கூறியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டப்போது, அவர் கூறியதாவது: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது குடும்ப முடிவு. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதை மத்திய அரசு ஏற்றால் 7 பேரை விடுதலை செய்யலாம். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications