அரசியல் நடத்த முடியாமல் திண்டாடி வருகிறார் கருணாநிதி... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

Minister Rajendra Balaji slams Karunanidhi
சிவகாசி: அதிமுக ஆட்சியில் ஒரு குறையும் சொல்ல முடியாமல் திணறி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று தமிழக செய்தி விளம்பரத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அதிமுக மகளிர் அணி தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வரலாற்று திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நடப்பு நிதியாண்டில் மட்டும் பள்ளிக் கல்வி துறைக்கு சுமார் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார். மக்கள் கஷ்டங்களை உணர்ந்து மனித நேயத்துடன் தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜாதி மதக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றது. தற்போது அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சியில் குறைகள் ஏதும் சொல்ல வழியில்லாமல் அரசியல் நடத்த முடியாமல் கருணாநிதி திண்டாடி வருகின்றார்.

குடும்ப பிரச்சனையை தீர்க்க முடியாத கருணாநிதியால் நாட்டு மக்களைப் பற்றி பேச அருகதையே இல்லை என்றார் ராஜேந்திர பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+